இடைசொல் ஏ (முன்) ஓ முன் - இடைச்சொல் லாகிய ஆறு ஏகாரத்தின் முன்னும் எட்டு ஓகாரத்தின் முன்னும் , வரின் இயல்பு - வல்லினம் வரின் பொதுவிதியால் மிகாது இயல்பாகும். 1. அவனே கொண்டான் என்பது பிரிநிலையும் , வினாவும் , ஈற்றசையும் , தேற்றமுமாம். "ஏயே தனையென்றோரிருடி வினவ" என்பது இசை நிறை. 2. அவனோ கொண்டான் என்பது ஒழியிசை முதலிய எட்டுமாம். ஏ ஓ முன் வரின் இயல்பு என்றது "இயல்பினும் விதியினும்" என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கல்.
|