பொதுப்பாயிரம்

நூலினது வரலாறு
சார்புநூல் இன்னது என்பது

 
8இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித்
திரிபுவே றுடையது புடைநூ லாகும் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இருவர் நூற்கும் ஒரு சிறை தொடங்கி - முதனூல் வழிநூல் என்னும் இருவகை நூல்களுக்கும் பொருள் முடிபு ஒருபுடை ஒத்து , வேறு திரிபு உடையது புடைநூல் ஆகும் - மற்றவைகள் எல்லாம் ஒவ்வாமையை உடையது சார்பு நூலாம் .

முதல் நூல் வழி நூல்களுக்குச் சிறுபான்மை ஒத்துப் பெரும்பாலும் வேறுபட்டிருப்பது சார்பு நூலாகும் .

திரிபு வேறுடையதும் உற்று நோக்குவோருக்குப் பொருளால் ஒருங்கு ஒத்தே நிற்கும் .