|
| பொதுப்பாயிரம் நூலினது வரலாறு விருத்தி உரை இன்னது என்பது | | 23 | சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக் கின்றி யமையா யாவையும் விளங்கத் தன்னுரை யானும் பிறநூ லானும் ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி. | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | சூத்திரத்துள் பொருள் அன்றியும் - சூத்திரத்திலுள்ள பொருள் அல்லாமலும் , ஆண்டைக்கு இன்றி அமையா யாவையும் விளங்க - அவ் இடங்களுக்கு இல்லாமல் நிறையாத பொருள்கள் எல்லாம் விளங்கும்படி , தன் உரையானும் பிற நூலானும் - தானுரைக்கும் உரையாலும் ஆசிரிய வசனங்களாலும் , ஐங் காண்டிகை உறுப்பொடு - மேற்கூறிய காண்டிகை உறுப்பு ஐந்தினாலும் , ஐயம் அகல எஞ்சாது மெய்யினை இசைப்பது விருத்தி - சந்தேகம் தீரச் சுருங்காது மெய்ப்பொருளை விரித்து உரைப்பது விருத்தியுரையாம் .
|
|