மெய்யீற்றுப் புணரியல்

மெய்யீற்றின்முன் மெய்

 
207ஞணநம லவளன வொற்றிறு தொழிற்பெயர்
ஏவல் வினைநனி யவ்வன் மெய்வரின்
உவ்வுறு மேவ லுறாசில சில்வழி.

 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஞணநமலவளன ஒற்று இறு தொழிற் பெயர் ஏவல் வினை - ஞ, ண, ந, ம, ல, வ, ள, ன என்னும் எட்டு மெய்களும் இறுதியாகிய முதல் நிலைத் தொழிற் பெயர்களும் ஏவல் வினைகளும் , ய அல் மெய் வரின் - யகர மொழிந்த மெய்கள் வருமாயின் , நனி உ, உறும் - பெரும்பாலும் உகரச் சாரியையை இறுதிக்கண் பொருந்தும் , சில ஏவல் சில் வழி உறா - சில ஏவல் வினைகள் சிலவிடங்களிலே அவ் உகரச் சாரியையைப் பொருந்தாவாம்.

முதல்நிலைத் தொழிற்பெயராவது , தொழிற்பெயர் விகுதி குன்றி முதல்நிலை மாத்திரம் நின்று தொழிற் பெயர்ப் பொருளைத் தருவதாம்.

1. உரிஞுக்கடிது, உண்ணுக்கடிது , பொருநுக்
கடிது , திருமுக்கடிது , தின்னுக்கடிது ,
நீண்டது , வலிது எனவும் .
கடுமை, நீட்சி வன்மை எனவும் .

தொழிற்பெயர்கள் இரு வழியும் உகரம் பெற்றன . மற்றவைகளும் இப்படியே. இவை, உரிஞுதல் உண்ணல் என்புழி வரும் விகுதி குன்றி , நின்றமை காண்க .

2. உரிஞு கொற்றா , உண்ணு கொற்றா , பொருநு கொற்றா , திருமுகொற்றா , தின்னுகொற்றா, நாகா , வளவா என ஏவல் வினை உகரம் பெற்றன . மற்றவையும் இப்படியே .

உகரச் சாரியை பெற்றும் பெறாதும் வரும் ஏவல் வினைகள் ண,ன,ல,ள என்னும் நான்கு ஈற்றனவுமாம். வரலாறு :- உண் கொற்றா, தின் சாத்தா , வெல் பூதா, துள் வளவா என வரும் .

ஞ,ந,ம,வ என்னும் நான்கு ஈறும் உகரம் பெற்றே வரும். இது ஏய்தாதது எய்துவித்தல் .