ண ன முன் - ணகர னகரங்களின் முன் , இனம் அவற்றிற்கு இனமாகிய டகர றகரங்களும் , க ச ஞ ப ம ய வ வரும் - ககரம் முதலிய இவ்வேழு மெய்களும் மயங்கும். விண்டு , வெண்கலம் , வெண்சோறு , வெண் ஞமலி , வெண்பல் , வெண்மலர் , மண் யாது , மண் வலிது எனவும், புன்றலை, புன்கண், புன்செய், புன்ஞமலி, புன்பயிர், புன்மலர், பொன் யாது, பொன் வலிது எனவும் வரும் .
|