தனிக் குறில் முன் ஒற்று = தனிக் குற்றெழுத்தின் முன் நின்ற மெய் , உயிர் வரின் இரட்டும் = உயிர் வரின் இரட்டித்து நிற்கும். மண் + அரிது = மண்ணரிது பொன் + அரிது = பொன்னரிது எனவும், மண் + அகம் = மண்ணகம் பொன் + ஒளி = பொன்னொளி எனவும் வரும். இது மேலைச் சூத்திரத்தால் எய்தியதன்மேல் சிறப்பு விதி, உயிர் ஏற இடங்கொடுத்தலே அன்றி இரட்டித்தும் நிற்கும் என்றலின்.
|