பொதுப்பாயிரம்

4. மாணாக்கனது வரலாறு
மாணாக்கர் இலக்கணம்

 
37*தன்மக னாசான் மகனே மன்மகன்
பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளற் குரைப்பது நூலே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தன் மகன் - தன் புதல்வனுக்கும் , ஆசான் மகன்- தன் ஆசிரியன் புதல்வனுக்கும் , மன் மகன் - அரசன் புதல்வனுக்கும் , பொருள் நனி கொடுப்போன் - பொருளை மிகுதியாகக் கொடுப்போனுக்கும் , வழிபடுவோன் - வழிபாடு செய்வோனுக்கும் , உரைகோள் ஆளற்கு - தன்னாற் சொல்லப்பட்ட உரையை விரைவிலே கற்கும் அறிவுடையோனுக்கும் , உரைப்பது நூல் - சொல்லப்படுவது நூலாகும் .

*தொல்காப்பியம் இளம்பூரணர் உரை மேற்கோள் .