பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
வழு விகற்பங்கள்

 
375திணையே பாலிடம் பொழுது வினாவிறை
மரபா மேழு மயங்கினாம் வழுவே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
திணை பால் இடம் பொழுது வினா இறை மரபு ஆம் ஏழும் - இருதிணையும் ஐம்பாலும் மூவிடமும் முக்காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும், மயங்கின் வழு ஆம் = தத்தம் நெறி மயங்கின் வழுவாம்.

திணை முதலிய அனைத்தும் மரபாம் ஆயினும் , இங்ஙனம் விதவாது ஒழிந்தனவற்றை மரபு எனக்கொள்க வென்பார், அதனை இறுதியிலே சொன்னார். மரபாவது தொன்றுதொட்டு வழங்கும் முறைமை.

(வ - று) 1. அவன் வந்தது...............................திணை வழு.

2. அவன் வந்தாள்...............................பால் வழு.

3. யான் வந்தான்...................................இட வழு.

4. நாளை வந்தான்.................................கால வழு.

5. கறக்கின்ற எருமை பாலோ சினையோ?......................வினா வழு.

6. கடம்பூர்க்கு வழியாது? எனின்
இடம்பூணி யென்னாவின்
கன்றன்று என்பது
.விடை வழு.
7. யானைமேய்ப்பானை
இடையன் ஆடுமேய்ப்
பானைப் பாகன் என்பன
மரபு வழு.

இவ்வாறே எழுவகை வழுக்களையும் உணரந்து வழக்கின் உள்ளும் செய்யுள் உள்ளும் அவை வாராமல் நீக்குக.

இடம்பூணி - இடப்பக்கத்தில் பூட்டப்பட்ட எருது.

24