சிறப்புப்பாயிரம்

சிறப்புப் பாயிரம் பிறர் செய்தற்குக் காரணம்

 
52*தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்றற் புகழ்தல் தகுதி யன்றே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தோன்றா தோற்றித் துறை பல முடிப்பினும் - தோன்றாத நுட்பங்கள் எல்லாம் காட்டிப் பல துறைப்பட்டு விரிந்த நூலைச் செய்து முடித்தாலும் , தான் தன்புகழ்தல் தகுதி அன்று - தானே தன்னைப் புகழ்ந்து கொள்ளுதல் தகுதி அன்றாம் .

அ.கு * தொல்காப்பியம் இளம்பூரணர் உரை மேற்கோள் .