உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

 
191நான்கன் மெய்யே லறவா கும்மே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
நான்கன் மெய் = இறுதி உயிர்மெய் கெட நின்ற நான்கு என்னும் எண்ணினது னகர மெய் , ல ற ஆகும் = லகர மெய்யாகவும் றகர மெய்யாகவும் திரியும் (ஏற்புழி - ஏற்குமிடத்து . )

ஏற்புழி என்றதனால் , னகர மெய் லகரமாகத் திரிவது உயிரும் இடையினமும் வரும் இடத்தெனவும் , றகரமாகத் திரிவது வல்லினம் வருமிடத்து எனவும் மெல்லினம் வருமிடத்து னகர ஈற்றுப் புணர்ச்சி போல் முடியும் எனவும் கொள்க .

நாலொன்று , நாலெடை , நாலுழக்கு , நாலடி எனவும் ,
நால்வட்டி எனவும் ,
நாற்பது , நாற்கழஞ்சு எனவும் .
நான்மணி , நானாழி எனவும் வரும் .