|
| பொதுப்பாயிரம் 1. நூலினது வரலாறு நூல் இன்னது என்பது | | 4 | நூலி னியல்பே நுவலி னோரிரு பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய் நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ டெண்ணான் குத்தியி னோத்துப் படலம் என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே . | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | நூலின் இயல்பு நுவலின் - நூலினது வரலாற்றைச் சொல்லின் ; ஓரிரு பாயிரம் தோற்றி - இருவகைப் பாயிரத்தையும் முன்னுடைத்தாகி , மும்மையின் ஒன்றாய் - மூவகை நூலுள் ஒன்றாகி , நாற்பொருட் பயத்தோடு - நான்கு பொருளாகிய பிரயோசனத்தோடு கூடி , எழு மதம் தழுவி - எழுவகை மதத்தையுந் தழுவி , ஐயிரு குற்றமும் அகற்றி - பத்துக் குற்றத்தையும் ஒழித்து , அம்மாட்சியோடு- பத்தழகுடனே , எண்ணான்கு உத்தியின் - முப்பத்திரண்டு உத்தியைக் கொண்டு , ஓத்துப் படலம் என்னும் உறுப்பினில் - ஓத்தும் படலமுமென்று சொல்லப்படும் இருவகை அவயவத்தோடு , சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகும் விகற்ப நடைபெறும் - சூத்திரமும் காண்டிகையுரையும் விருத்தியுரையுமாகிய வேறு பாட்டு நடைகளைப் பெற்று வரும் .
|
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next