உயிர் , மவில் ஆறும் - உயிர் வருக்கத்திலும் மவ் வருக்கத்திலும் அவ்வாறும் , த ப நவில் ஐந்தும் - தவ் வருக்கத்திலும் பவ் வருக்கத்திலும் நவ் வருக்கத்திலும் ஐவ் வைந்தும் , க வ சவில் நாலும் - கவ் வருக்கத்திலும் வவ் வருக்கத்திலும் சவ் வருக்கத்திலும் நந்நான்கும் , யவ்வில் ஒன்றும் - யவ் வருக்கத்தில் ஒன்றும் , ஆகும் நெடில் - ஆகும் நெட்டெழுத்தாலாகிய மொழி நாற்பதும் , நொ து ஆம் குறில் இரண்டோடு - நொவ்வுந் துவ்வும் ஆகும் குற்றெழுத்தாலாகிய மொழி இரண்டுடனே , ஓரெழுத்து இயல் பதம் ஆறேழ் சிறப்பின - ஓரெழுத்தாலாகிய மொழிகள் நாற்பத்திரண்டும் சிறப்பினவாம். ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ எனவும் , மா , மீ , மூ , மே , மை , மோ எனவும் , தா , த , தூ , தே , தை எனவும் , பா , பூ , பே , பை , போ எனவும் , நா , நீ , நே , நை , நோ எனவும் , கா , கூ , கை , கோ எனவும் , வா , வ , வை , வௌ எனவும் , சா , சீ , சே , சோ எனவும் , யா எனவும் , நொ , து எனவும் வரும் . இவற்றுள் , ஊ-இறைச்சி , ஓ-மதகுநீர் தாங்கும் பலகை , பே - நுரை , நே - அன்பு , சோ - மதில் , நோ - துன்பப்படு , து - உண் . இவை சிறப்பின எனவே , கு , கௌ , பீ , வே எனச் சிறப்பு இல்லாதவைகளும் சில உள என்றறிக.
|