மெய்யீற்றுப் புணரியல்

மெய் ஈற்றின் முன் உயிர்

 
204உடன்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
உடல் மேல் - நிலைமொழி ஈற்றில் நின்ற மெய்யின் மேல் , உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - வரு மொழி முதல் உயிர் வந்து ஒன்றுபட்டு இணங்கி நிற்பது இயல்பு புணர்ச்சியேயாம்.

தோன்றல் + அழகன் = தோன்றலழகன்
உரிஞ் + அழகிது = உரிஞழகிது
புகழ் + அழகிது = புகழழகிது எனவும்,

வேல் + எறிந்தான் = வேலெறிந்தான் எனவும் வரும்.