உரியியல்

உயிர் அல்லாத பொருள்

 
450உணர்விய லாமுயி ரொன்று மொழித்த
உடன்முத லனைத்து முயிரல் பொருளே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
உணர்வு இயல் ஆம் உயிர் ஒன்றும் ஒழிந்த = அறிவு மயமாகிய உயிர் ஒன்றுமே அன்றி , உடல் முதல் அனைத்தும் உயிர் அல் பொருள் = உடம்பு முதலாகிய உலகத்துப் பொருள்கள் எல்லாம் உயிர் அல்லாத பொருள்களாம்.
9