பொதுப்பாயிரம்

நூலினது வரலாறு
ஓத்து இன்னது என்பது

 
16நேரின மணியை நிரல்பட வைத்தாங்
கோரினப் பொருளை யொருவழி வைப்ப
தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
நேர் இன மணியை நிரல் பட வைத்து ஆங்கு - ஒரு சாதியாய் உள்ள மணிகளை வரிசையாகப் பதித்தாற் போல , ஓரினப் பொருளை ஒரு வழி வைப்பது - ஒரு சாதியாய் உள்ள பொருள்களை ஒரு வழிப்படச் சொல்வது , ஓத்து என மொழிப - ஓத்து உறுப்பாம் என்று சொல்லுவர் , உயர் மொழிப் புலவர் - உயிர்க்கு உறுதி பயக்கும் மெய்ம் மொழிகளை யுடைய புலவர் .

நேர்தல் - ஒன்றுபடுதல் .