பொதுப்பாயிரம்

நூலினது வரலாறு
நூல் என்னும் பெயர்க் காரணம்

 
24பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத
கையேவா யாகக் கதிரே மதியாக
மையிலா நூன்முடியு மாறு .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தன் சொல் பஞ்சியா - தன் சொற்கள் பஞ்சாகவும் , பனுவல் இழை ஆக - செய்யுள் இழையாகவும் , செஞ்சொற் புலவன் சேயிழையா - சொற்களை அறிந்த புலவன் நூற்கின்ற பெண்ணாகவும் , எஞ்சாதவாய் கையாக - குறையாத வாய் கையாகவும் , மதி கதிர் ஆக - அறிவு கதிராகவும் , மை இலா நூல் முடியும் ஆறு - குற்றமில்லாத கல்வி நூலானது முடியும் வழி இது .

ஆதலால் , நூலென்றது உவமை ஆகுபெயர் எனக் காண்க.