உரியியல்

இந்நூலிற்குப் புறனடை

 
462பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
பழையன கழிதலும் = முற்காலத்துள்ள இலக்கணங்களுள் சில பிற்காலத்து இறத்தலும் , புதியன புகுதலும் = முற்காலத்து இல்லன சில பிற்காலத்து இலக்கணம் ஆதலும் , வழு அலகால வகையினான் = குற்றம் அல்லவாம் கால வேற்றுமை அது ஆகலால்.

இவற்றிற்கும் உதாரணம் முன் வந்தன காண்க.

21

உரியியல் முற்றிற்று
சொல்லதிகாரம் முற்றுப்பெற்றது

நன்னூல் காண்டிகை உரை
முற்றுப்பெற்றது