மெய்யீற்றுப் புணரியல்

லகர ளகர வீறு

 
234புள்ளும் வள்ளுந் தொழிற்பெயரு மானும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் மானும் - இவ்விரு சொற்களும் இரு வழியால் முடிதலே அன்றித் தொழிற்பெயர் போல உகரச் சாரியையும் பெற்றுப் புணரும் .

புள்ளுக்கடிது, வள்ளுக்கடிது, நன்று , வலிது ,
எனவும் .

புள்ளுக்கடுமை, வள்ளுக்கடுமை, நன்மை, வன்மை
எனவும் வரும் .

இது " லளவேற் றுமையிற் றடவும் " என்னும் சூத்திரத்தால் (சூ.227) எய்தியதன்மேல் சிறப்புவிதி.