பூப் பெயர் முன் - பூ என்னும் பல பொருள் பெயர்ச்சொல்லின் முன் , இன மென்மையும் தோன்றும்- வல்லினம் வரின் பொது விதியால் மிகுதலே அன்றி அவற்றிற்கு இனமாகிய மெல்லினமும் மிகும். பூங்கொடி, பூஞ்சோலை, பூந்தடம், பூம்பணை என வரும். இவைகளுள்ளே பூ என்பது மலராயின், இரண்டாம் வேற்றுமைத்தொகை , அழகாயின் பண்புத்தொகை. இனமென்மையும் தோன்றும் என்றது "இயல்பினும் விதியினும்" என்னும் சூத்திரத்தால் எய்தியதன்மேல் சிறப்பு விதி.
|