பூமலி அசோகின் புனை நிழல் அமர்ந்த நான் முகன் தொழுது - பூக்கள் நிறைந்த அசோக மரத்தினது அலங்கரிக்கப்பட்ட நிழலின்கண் எழுந்தருளியிருந்த நான்கு திருமுகங்களை உடைய கடவுளை வணங்கி , எழுத்து நன்கு இயம்புவன் - எழுத்திலக்கணத்தை நன்றாகச் சொல்வேன் யான். எழுத்து என்பது ஆகுபெயர். ஏகாரம் ஈற்றசை. எல்லாம் வல்ல கடவுளை வணங்கலால் இனிது முடியும் என்பது கருதி நன்கு இயம்புவன் என்று புகுந்தமையின், இது நுதலிப் புகுதல் என்னும் உத்தி .
|