உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

 
193எட்ட னுடம்புணவ் வாகு மென்ப.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
எட்டன் உடம்பு - இறுதி உயிர்மெய் கெட நின்ற எட்டு என்னும் எண்ணினது டகர மெய் , ண ஆகும் என்ப - நாற்கணமும் வர ணகர மெய்யாகத் திரியும் என்று சொல்லுவர் புலவர்.

எண்பது, எண்கழஞ்சு, எண்கலம், எண்குணம்
எனவும்,
எண்ணாழி எனவும்,
எண்வகை எனவும்,
எண்ணைந்து எனவும் வரும் .