|
| சிறப்புப்பாயிரம் தற்புகழ்ச்சி குற்றம் ஆகா இடங்கள் | | 53 | மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினுந் தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும் மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினுந் தன்னை மறுதலை பழித்த காலையுந் தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே. | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும் - அரசனது சபைக்கு எழுதுஞ் சீட்டுக் கவியிலும் , தன்னுடைய ஆற்றல் உணரார் இடையினும் - தனது கல்வி வலிமையை அறியாதாரிடத்திலும் , மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் - பெரிய சபையில் வாதஞ் செய்து வெல்லும் பொழுதும் , தன்னை மறுதலை பழித்த காலையும் - தன்னை எதிரி பழித்த காலத்திலும் , தன்னைப் புகழ்தலும் புலவோற்குத் தகும் - தன்னைத் தான் புகழ்ந்து கொள்ளலும் புலவனுக்குத் தகும் .
|
|