|
சொல்லதிகாரம் [சொல்லினது அதிகரித்தலையுடைய படலம்]பெயரியல் [பெயர்ச்சொல்லின் இலக்கணம் உணர்த்துவது] கடவுள் வணக்கமும் அதிகாரமும் |
|
258 | முச்சக நிழற்று முழுமதி முக்குடை அச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே. |
|
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை |
|
முச்சகம் நிழற்றும் முழுமதி முக்கடை அச்சுதன் அடி தொழுது = மூன்று உலகத்திற்கும் நிழலைச் செய்யும் நிறைந்த மதிபோலும் மூன்று குடையை உடைய அழியாத கடவுளுடைய அடிகளை வணங்கி , அறைகுவன் சொல் - சொல்லுவேன் , முன் அதிகாரத்துள் சொல்லிய எழுத்தினால் ஆகிய சொல் இலக்கணத்தை. ஏகாரம் ஈற்றசை .
|