பெயரியல்

வேற்றுமை
ஐ உருபு முதல் சினை இரண்டினும் வாராமைக்குக் காரணமும் மேலைச் சூத்திரப் பொருளோடு இப்பொருளைப் பிண்டப் பொருளுக்கு ஏற்பித்தலும்

 
316முதலிவை சினையிவை யெனவே றுளவில
உரைப்போர் குறிப்பின வற்றே பிண்டமும்
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முதல் இவை சினை இவை என வேறு உள இல = கடங்கள் இவை படங்கள் இவை என்றாற் போல முதற்பொருள்கள் இவை சினைப்பொருள்கள் இவை என்பதற்கு இரண்டாக வேறுள்ளன இலவாம் , உரைப்போர் குறிப்பின = ஒரு பொருளையே இரண்டாகப் பகுத்துச் சொல்வோரது குறிப்பின் மாத்திரை அளவேயாம் , பிண்டமும் அற்று = பிண்டப் பொருளும் அத்தன்மைத்தாம் .

யானையைக் குறித்தபோது யானை உண்டாக அதனுடைய கை கால் கொம்பு முதலியவை வேறில்லையாம் , அவ் அவயவத்தைக் குறித்தபோது அவை உண்டாக யானை வேறில்லையாம் , ஆதலால் இப்படிச் சொல்லப்பட்டன .

இனிப் பிண்டப்பொருள், நெல்லைப் பொலியின்கண் வாரினான், நெல்லினது பொலியை வாரினான் என வரும். பிண்டப்பொருளாகிய பொலிக்குப்பையும் பிண்டித்த பொருளாகிய நெல்லும் வேறு ஆகாமையால், அவ் இரண்டன் இடத்தும் ஐ உருபு வருவது சிறப்பன்று என அறிக.