இடையியல்

முற்றும்மைக்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி

 
426முற்றும்மை யொரோவழி யெச்சமு மாகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முற்றும்மை ஒரோவழி எச்சமும் ஆகும் = மேற்கூறிய முற்றும்மை ஒரோவிடத்து எச்ச உம்மையும் ஆம் .

எல்லாரும் வந்திலர் , அவர் பத்துங் கொடார் . இங்கே சிலர் வந்தார் , சிலகொடுப்பார் எனவும் பொருள்படுதலால் , எச்ச உம்மையும் ஆயிற்று.

7