பொதுப்பாயிரம்

பாடங் கேட்டலின் வரலாறு

 
43*முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முக்கால் கேட்பின் - மூன்றுதரங் கேட்டான் ஆயின் , முறை அறிந்து உரைக்கும் - ஆசிரியன் கற்பித்த முறையை உணர்ந்து பிறர்க்குச் சொல்லுவான்.

(அ.கு)*தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை மேற்கோள் .