எழுத்தியல்

பிறப்பு
ஆய்தக் குறுக்கம்

 
97லளவீற் றியைபினா மாய்த மஃகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ல ள ஈற்று இயைபின் ஆம் - லகர ளகார ஈற்றுப் புணர்ச்சியில் ஆகின்ற ஆய்தம்.

" குறில்வழி லளத்தவ் வணையி னாய்த
மாகவும் பெறூஉ மல்வழி யானே "
என்ற ஆய்தம், அஃகும் - தன் அரை மாத்திரையில் குறுகும்.

கல் + தீது - கஃறீது , முள்+தீது - முஃடீது என வரும்.

இது முடிவிடம் கூறல் என்னும் உத்தி .

ஆய்தக் குறுக்கம் இட வகையால் இரண்டாதல் காண்க.