உரியியல்

ஐயறிவு உயிர்

 
449வானவர் மக்க ணரகர் விலங்குபுள்
ஆதிசெவி யறிவோ டையறி வுயிரே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
வானவர் மக்கள் நரகர் விலங்கு புள் ஆதி = தேவரும் மனிதரும் நரகரும் மிருகங்களும் பறவைகளும் முதலியவை , செவி அறிவோடு ஐயறிவு உயிர் = கீழ்ப்போன நாலறிவுகளே அன்றிச் செவியால் சத்தத்தை அறியும் அறிவோடு ஐயறிவு உயிர்களாம்.
8