வேற்றுமை ஐம் முதல் ஆறு தழுவு தொடர் ஆம் - வேற்றுமைப் புணர்ச்சி ஐ , ஆல் , கு , இன் ,அது , கண் என்னும் ஆறுஉருபுகளும் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரப் பதங்கள் பொருந்தும் தொடர்ச்சியாம் , அல்வழி - அல்வழிப் புணர்ச்சி , தொழில் ( தழுவு தொடர் ) - வினைத்தொகையும் , பண்பு ( தழுவு தொடர் ) - பண்புத்தொகையும் , உவமை ( தழுவு தொடர்) - உவமைத்தொகையும் , உம்மை ( தழுவு தொடர் ) - உம்மைத் தொகையும் , அன்மொழி ( தழுவு தொடர் ) - அன்மொழித் தொகையும் , எழுவாய் ( தழுவு தொடர் ) - எழுவாய்த் தொடரும் , விளி ( தழுவு தொடர் ) - விளித்தொடரும் , ஈரெச்சம்(தழுவுதொடர்) - பெயரெச்சத் தொடரும் வினையெச்சத் தொடரும் , (ஈர்) முற்றுத் (தழுவு தொடர்) - தெரிநிலை வினைமுற்றுத் தொடரும் குறிப்பு வினைமுற்றுத் தொடரும் , இடை ( தழுவு தொடர்) -இடைச் சொல்தொடரும் , உரி(தழுவு தொடர்) - உரிச்சொல் தொடரும் , அடுக்கு - அடுக்குத் தொடரும் , எனஈரேழ் - எனப் பதங்கள் பொருந்தும் தொடர்ச்சி பதினான்காம் . வேற்றுமை | வேற்றுமைத்தொகை | | வேற்றுமைவிரி | 1. | நிலங்கடந்தான் | [ஐ] | நிலத்தைக் கடந்தான். | 2. | கல்லெறிந்தான் | [ஆல்] | கல்லா லெறிந்தான் | 3. | கொற்றன் மகன் | [கு] | கொற்றனுக்கு மகன் | 4. | மலை வீழருவி | [இன்] | மலையின் வீழருவி | 5. | சாத்தன் கை | [அது] | சாத்தனது கை | 6. | குன்றக் கூகை | [கண்] | குன்றத்தின்கட் கூகை |
அல்வழி ஐந்து தொகைநிலைத்தொடர் | 1. | கொல்யானை | வினைத்தொகை | 2. | கருங்குதிரை சாரைப்பாம்பு | பண்புத் தொகை இருபெயரொட்டுப் பண்புத்தொகை | 3. | மதிமுகம் | உவமைத்தொகை | 4. | இராப்பகல் | உம்மைத் தொகை | 5. | பொற்றொடி | அன்மொழித்தொகை |
ஒன்பது தொகா நிலைத்தொடர் | 6. | சாத்தன் வந்தான் | எழுவாய்த் தொடர் | 7. | சாத்தா வா | விளித் தொடர் | 8. | வந்தசாத்தன் | பெயரெச்சத் தொடர் | 9. | வந்து போனான் | வினையெச்சத் தொடர் | 10. | வந்தான் சாத்தன் | தெரிநிலை வினைமுற்றுத்தொடர் | 11. | பெரியன் சாத்தன் | குறிப்பு வினைமுற்றுத்தொடர் | 12. | மற்றொன்று | இடைச்சொற்றொடர் | 13. | நனிபேதை | உரிச்சொற்றொடர் | 14. | பாம்புபாம்பு | அடுக்குத் தொடர் |
தழுவு தொடர் ஆறும் பதினான்கும் எனக் கூறவே , அவ்விரு வழியிலும் தழாத்தொடரும் சில உள என்றாராயிற்று. கைக்களிறு என்பது கையை உடைய களிறு என விரிக்கப்படுதலால், கையென்பது களிறு என்பதைத் தழுவாது தொடர்ந்தது; இது தழாத்தொடராகிய வேற்றுமைப் புணர்ச்சி, சுரையாழ அம்மி மிதப்ப என்பது சுரை மிதப்ப அம்மி யாழ எனக் கூட்டப்படுதலால், சுரை என்பது ஆழ என்பதையும் அம்மி என்பது மிதப்ப என்பதையும் தழுவாது தொடர்ந்தன ; இவை தழாத் தொடராகிய அல்வழிப் புணர்ச்சி. தழாத்தொடராவது நிலைமொழியானது வருமொழியைப்பொருள் பொருத்த முறத் தழுவாத தொடர் . பொருட் பொருத்தமுறத் தழுவிய தொடர் தழுவுதொடர் .
|