மெய்யீற்றுப் புணரியல்

வருமொழித் தகர நகரத் திரிபு

 
237னலமுன் றனவும் ணளமுண் டணவும்
ஆகுந் தநக்க ளாயுங் காலே
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ன ல முன் ( த நக்கள்) ற ன வும் = னகர, லகரங்களின் முன் வருந் தகரம் றகரமாம் அவற்றின்முன் வரும் நகரம் னகரமாம் , ண ள முன் த நக்கள் ட ணவும் ஆகும் = ணகர, ளகரங்களின் முன் வரும் தகரம் டகரமாம் அவற்றின் முன் நகரம் ணகரமாம் , ஆயுங்கால் = ஆராயுமிடத்து.

பொன்+தீது = பொன்றீது, கல்+தீது = கற்றீது
பொன் + நன்று = பொன்னன்று, கல்+நன்று =
கன்னன்று எனவும் .

மண்+தீது = மண்டீது, முள்+தீது = முட்டீது,
மண்+நன்று = மண்ணன்று, முள்+ நன்று = முண்
ணன்று எனவும் அல்வழியிலே திரிந்தன.

பொற்றீமை, கற்றீமை, பொன்னன்மை, கன்
னன்மை எனவும்,

மட்டீமை, முட்டீன்மை, மண்ணன்மை, முண்
ணன்மை, எனவும் வேற்றுமையிலே திரிந்தன,

' ஆயுங் காலே ' என்றதனால், அல்வழி வேற்றுமைப் பொருள் நோக்கத்தாலன்றி மயக்கவிதி இன்மையால் இப்படிப் புணரும் முதல் ஈறு இரண்டனுள் ஒன்றேனும் இரண்டுமேனும் விகாரப்பட்டு மயங்குதற்கு உரியனவாகிப் புணருமென்பதும், மயக்க விதியுள்ளனவற்றிற்கு வரும் விகாரம் அல்வழி வேற்றுமைப்பொருள் நோக்கத்தால் வருமென்பது பெற்றாம்.