னவ்வீற்று உயர்திணைப் பெயர்க்கண் = பொது விதி அன்றி னகரமெய்யீற்று உயர்திணைப் பெயர்களுள் , ஒருசார் அளவு = சில அளபெடுத்தலும் , ( ஒருசார் ) ஈறு அழிவு = சில ஈறு கெடுதலும் , ( ஒருசார் ) அயல் நீட்சி = சில ஈற்று அயல் நீளுதலும் , ( ஒருசார் ) அதனோடு ஈறுபோதல் = சில ஈற்று அயல் நீண்டு ஈறு கெடுதலும் ( ஒருசார் ) அவற்றோடு ஓ உறல் = சில ஈறுகெட்டு ஈற்று அயல் நீண்டு ஓகார மிகுதலும் ; (ஒருசார் ) ஈறு அழிந்து ஓ உறல் = சில ஈறு கெட்டு ஓகார மிகுதலும் , ( ஒருசார் ) இறுதி யவ்வாதல் = சில இறுதி னகர மெய் யகரமெய்யாதலும் ,( ஒரு சார் ) அதனோடு அயல் திரிந்த ஏ உறல் - சில ஈற்று னகர மெய் யகர மெய்யாகத் திரிந்து அயலில் ஆகாரம் ஓகாரமாய் ஏகாரம் மிகுதலும் , ( ஒருசார் ) ஈறு அழிந்து அயல் ஏ ஆதலும் = சில ஈறு கெட்டு அயலில் அகரம் ஏகாரமாதலும் , விளியுருபு ஆகும் = விளி உருகளாகும் . அம்பர்கிழான் - அம்பர்கிழாஅன் - அளபாயிற்று . புலவன் - புலவ - ஈறழிந்தது . பெருமான் - பெருமான் ஈற்றயல் நீண்டது . மன்னன் - மன்னா ஈற்றயல் நீண்டு ஈறு கெட்டது. ஐயன் - ஐயாவோ - ஈற்றயல் நீண்டு ஈறுகெட்டு ஓகார மிக்கது . திரையன் - திரையவோ ஈறழிந்து ஓகாரம் மிக்கது . வாயிலான் - வாயிலாய் - இறுதி யவ்வாயிற்று . வாயிலான் - வாயிலோயே - இறுதி யவ்வாய் , ஈற்றயல் ஆகாரம் ஓகாரமாய் ஏகாரம்மிக்கது . ஐயன் - ஐயே - ஈறழிந்து அயலில் அகரம் ஏகாரம் ஆயிற்று , இவ்வொருசார் என்பதை , விளி அதிகாரம் முழுதும் கூட்டுக .
|