கண் ... இல் = கண் முதலாக இல் ஈறாகச் சொல்லப்பட்ட இவ் இருபத்தெட்டும் , இடப்பொருள் உருபு = தம்மை ஏற்ற பெயர்ப்பொருளை இடப்பொருளாக வேற்றுமைசெய்யும் உருபுகளாம் . கண் ஒழிந்த உருபுகளுக்கு உதாரணம் கால் - " ஊர்க்கால் நிவந்த பொதும்பர் ." கடை - "வேலின்கடை மணிபோல் திண்ணியான்" இடை - "நல்லாரிடைப் புக்கு " தலை -" வலைத்தலை மான் அன்ன நோக்கியர் " வாய் - " குரை கடல் வாய் அமுதென்கோ " திசை - "தேர்த்திசை இருந்தான் வயின் - "அவர்வயின் செல்வாய் முன் - "கற்றார் முன் தோன்றா கழிவிரக்கம் சார் - "காட்டுச்சாரோடுங் குறுமுயால் வலம் - " கைவலத்துள்ளது கொடுக்கும் இடம் - "இல்லிடப்பரத்தை மேல் - "தன்மேல் கடுவரை நீரிற் கடுத்து வரக் கண்டும் " [ கடுப்பு - விரைவு ] கீழ் - " பிண்டிக் கண்ணார் நிழற் கீழ் எந்தம் அடிகள் புடை - "எயிற்புடை நின்றான்" முதல் - "சுரன்முதல் வந்த வுரன்மாய் மாலை " [ சுரன் - பாலை நிலம் . ] பின் - " காதலிபின் சென்றதம்ம பாடு - " நம்பாடு அணையாத நாள் " அளை-"கல்லளைச்சுனைநீர் ' தேம் - தோழிக்குரியவைகோடாய்தேத்து " [ கோடாய் = கைத்தாய் , ] உழை - "அவனுழைவந்தான் வழி - "நின்றதோர் நறவேங்கை நிழல்வழி யசைந்தன்ன" உழி - "உறைப்புழியோலைபோல உளி - "குயில்சேர்குளிர் காவுளிசேர் புறையும் உள் - " முல்லையங்குவட்டுள் வாழும் "அகம் - பயன்சாராப் பண்பில்சொற் பல்லாரகத்து புறம் - "செல்லுமென்னுயிர்ப் புறத்திறுத்த மருண்மாலை" இல் - "ஊரிலிருந்தார் " இனிக் கண் கான் முதலியன , இடவேறுபாடுகளை உணர்த்தும்போது ஒரு திறத்தனவாகிய உருபாகாது , பல திறத்தனவாகிய இடங்களை உணர்த்தும் பெயர்களாம் . கண்ணகன் ஞாலம் , அகத்திலிருந்தான் ,வீட்டின் புறத்திலிருந்தான் , மேலிடத்திருந்தான் , முன்னிருந்தான் , கடை நாள் , இடைச்சுரம் , தலையாயார் , தென்றிசை என வரும் , பிறவுமன்ன .
|