41நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்
அம் மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை
கடனாக் கொளினே மடம் நனி இகக்கும்
உரை
15நூல்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
ஏற்புழி அறிந்து இதற்கு இவ்வகை யாமெனத்
தகும் வகை செலுத்துதல் தந்திர உத்தி
உரை
4நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
நால்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
ஐ இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு
எண் நான்கு உத்தியின் ஓத்துப் படலம்
என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே
உரை
3நூலே நுவல்வோன் நுவலும் திறனே
கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்
எல்லாநூற்கும் இவை பொதுப் பாயிரம்
உரை