67 | எ யா முதலும் ஆ ஓ ஈற்றும் ஏ இரு வழியும் வினா ஆகும்மே |
|
உரை |
163 | எகர வினா முச்சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் எய்தின் வவ்வும் பிறவரின் அவையும் தூக்கில் சுட்டு நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே |
|
உரை |
357 | எச்சப் பெயர்வினை எய்தும் ஈற்றினும் |
|
உரை |
193 | எட்டன் உடம்பு ண ஆகும் என்ப |
|
உரை |
303 | எட்டன் உருபே எய்துபெயர் ஈற்றின் திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல் திரிபுமாம் பொருள் படர்க்கை யோரைத் தன்முகம் ஆகத் தான் அழைப்பதுவே |
|
உரை |
88 | எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பின் திரிபும் தத்தமின் சிறிதுள ஆகும் |
|
உரை |
188 | எண் நிறை அளவும் பிறவும் எய்தின் ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண்ணுள் முதல் ஈர் எண் முதல் நீளும் மூன்று ஆறு ஏழ் குறுகும் ஆறு ஏழு அல்லவற்றின் ஈற்றுயிர் மெய்யும் ஏழன் உயிரும் ஏகும் ஏற்புழி என்மனார் புலவர் |
|
உரை |
57 | எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை முதல் ஈறு இடைநிலை போலி என்றா பதம் புணர்பு எனப் பன்னிரு பாற்று அதுவே |
|
உரை |
368 | எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் எனும் நான்கு அளவையுள் உம் இலது அத்தொகை |
|
உரை |
158 | எண்மூ எழுத்து ஈற்று எவ்வகை மொழிக்கும் முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பும் குறில் வழி ய தனி ஐ நொ து முன் மெலி மிகலுமாம் ண ள ன ல வழி ந திரியும் |
|
உரை |
425 | எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை தெரிநிலை ஆக்கமோடு உம்மை எட்டே |
|
உரை |
388 | எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே |
|
உரை |
245 | எல்லாம் என்பது இழிதிணை ஆயின் அற்று ஓடு உருபின் மேல் உம் உறுமே அன்றேல் நம் இடை அடைந்து அற்று ஆகும் |
|
உரை |
246 | எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை தள்ளி நிரலே தம் நும் சாரப் புல்லும் உருபின் பின்னர் உம்மே |
|
உரை |
319 | எல்லை இன்னும் அதுவும் பெயர்கொளும் அல்ல வினைகொளும் நான்கு ஏழ் இருமையும் புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர் |
|
உரை |
350 | எவன் என் வினா வினைக்குறிப்பு இழி இருபால் |
|
உரை |
391 | எழுத்து இயல் திரியாப் பொருள்திரி புணர்மொழி இசைத் திரிபால் தெளிவு எய்தும் என்ப |
|
உரை |
128 | எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம் அது பகாப்பதம் பகுபதம் என இரு பால் ஆகி இயலும் என்ப |
|
உரை |
11 | எழு வகை மதமே உடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே பிறர்நூல் குற்றம் காட்டல் ஏனைப் பிறிதொடு படாஅன் தன்மதம் கொளலே |
|
உரை |
415 | எழுவாய் இறுதி நிலைமொழி தம்முள் பொருள் நோக்கு உடையது பூட்டுவில் ஆகும் |
|
உரை |
429 | என்றும் எனவும் ஒடுவும் ஒரோவழி நின்றும் பிரிந்து எண்பொருள் தொறும் நேரும் |
|
உரை |