261 | மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை |
|
உரை |
122 | மகர இறுதி அஃறிணைப் பெயரின் னகரமோடு உறழா நடப்பன உளவே |
|
உரை |
30 | மங்கலம் ஆகி இன்றி அமையாது யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் பொழுதின் முகம் மலர்வு உடையது பூவே |
|
உரை |
115 | மம்முன் ப ய வ மயங்கும் என்ப |
|
உரை |
166 | மரப்பெயர் முன்னர் இன மெல்லெழுத்து வரப் பெறுனவும் உள வேற்றுமை வழியே |
|
உரை |
215 | மரம் அல் எகின் மொழி இயல்பும் அகரம் மருவ வலிமெலி மிகலும் ஆகும் |
|
உரை |
0 | மலர்தலை உலகின் மல்கு இருள் அகல இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும் பரிதியின் ஒருதான் ஆகி முதல் ஈறு ஒப்பு அளவு ஆசை முனிவுஇகந்து உயர்ந்த அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின் மன இருள் இரிய மாண்பொருள் முழுவதும் முனிவுஅற அருளிய மூஅறு மொழியுளும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கு எல்லையின் இருந் தமிழ்க் கடலுள் அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத் தொகைவகை விரியின் தருகெனத் துன்னார் இகல் அற நூறி இருநிலம் முழுவதும் தனது எனக் கோலித் தன்மத வாரணம் திசைதொறும் நிறுவிய திறல் உறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோல் சீய கங்கன் அருங்கலை வினோதன் அமரா பரணன் மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின் வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன் பொன்மதில் சனகைச் சன்மதி முனி அருள் பன்னருஞ் சிறப்பின் பவணந்தி என்னும் நாமத்து இருந்தவத் தோனே |
|
உரை |
219 | மவ்வீறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும் |
|
உரை |
434 | மற்றையது என்பது சுட்டியதற்கு இனம் |
|
உரை |
412 | மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள் அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப்புனலே |
|
உரை |
53 | மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும் தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும் மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே |
|
உரை |
432 | மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம் கழிவு மிகுதி நிலைபேறு ஆகும் |
|
உரை |