தொடக்கம் | ||
பாடங் கேட்டலின் வரலாறு
|
||
40. | கோடல் மரபே கூறும் காலை பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகி அவன்குறிப்பின் சார்ந்து இரு என இருந்து சொல் எனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச் சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச் செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆகக் கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்துப் போ எனப் போதல் என்மனார் புலவர் |
உரை |
41. | நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல் அம் மாண்பு உடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை கடனாக் கொளினே மடம் நனி இகக்கும் |
உரை |
42. | ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபாடு இலனே |
உரை |
43. | முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும் | உரை |
44. | ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் கால்கூறு அல்லது பற்றலன் ஆகும் |
உரை |
45. | அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும் |
உரை |
46. | அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம் அறத்தின் திரியாப் படர்ச்சி வழிபாடே |
உரை |