பதம்
 
128. எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்
பதமாம் அது பகாப்பதம் பகுபதம் என
இரு பால் ஆகி இயலும் என்ப
உரை
   
129. உயிர்மவில் ஆறும் த ப நவில் ஐந்தும்
க வ சவில் நாலும் யவ்வில் ஒன்றும்
ஆகும் நெடில் நொ து ஆம் குறில் இரண்டோடு
ஓர் எழுத்து இயல் பதம் ஆறு ஏழ் சிறப்பின
உரை
   
130. பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும்
எழுத்து ஈறு ஆகத் தொடரும் என்ப
உரை
   
131. பகுப்பால் பயன் அற்று இடுகுறி ஆகி
முன்னே ஒன்றாய் முடிந்து இயல்கின்ற
பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம்
உரை
   
132. பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின்
வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதமே
உரை
   
133. பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னி புணர்ப்ப முடியும் எப்பதங்களும்
உரை