தொடக்கம் | ||
சொற் பாகுபாடு
|
||
270. | அதுவே, இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர்வினை என இரண்டு ஆகும் இடை உரி அடுத்து நான்குமாம் திசை வடசொல் அணுகா வழி |
உரை |
271. | செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும் தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல் |
உரை |
272. | ஒருபொருள் குறித்த பலசொல் ஆகியும் பலபொருள் குறித்த ஒருசொல் ஆகியும் அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும் |
உரை |
273. | செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற்று இரண்டினில் தமிழ் ஒழி நிலத்தினும் தம் குறிப்பினவே திசைச்சொல் என்ப |
உரை |
274. | பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும் ஈர் எழுத்தானும் இயைவன வடசொல் |
உரை |