தொடக்கம் |
களவு இயல்
|
|
|
117.
| .உளம் மலி காதல் களவு எனப்படுவது ஒரு நான்கு வேதத்து , இரு -நான்கு மன்றலுள், யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப. | |
உரை
|
|
|
|
|
கைக்கிளை |
118.
| காட்சி , ஐயம் , துணிவு , குறிப்பறிவு ,என மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை. | |
உரை
|
|
|
|
|
காட்சி |
119.
| புணர்ப்பதும் , பிரிப்பதும் , ஆகிய பால்களுள் புணர்க்கும் பாலில் , பொருவிறந்து ஒத்த கறைவேல் காளையும் , கன்னியும் , காண்ப; இறையோன் உயரினும் குறைவு இன்று என்மனார். | |
உரை
|
|
|
|
|
ஐயம் |
120.
| மடமான் நோக்கி வடிவும் , கண்ட இடமும் , சிறுந்துழி எய்துவது ஐயம் . | |
உரை
|
|
|
|
|
துணிவு |
121.
| எழுதிய வல்லியும் , தொழில்புனை கலனும், வாடிய மலரும் , கூடிய வண்டும், நடைபயில் அடியும் , புடைபெயர் கண்ணும், அச்சமும், பிறவும் ,அவன் பால் நிகழும் கச்சம் இல் ஐயம் கடிவன ஆகும். | |
உரை
|
|
|
|
|
குறிப்பு அறிதல் |
122.
| அரிவை நாட்டம் அகத்து நிகழ் வேட்கை தெரிய உணர்த்தும் குரிசிற்கு என்ப. | |
உரை
|
|
|
|
|
களவிற்கு உரிய கிளவித் தொகை |
123.
| இயற்கைப் புணர்ச்சி , வன்புறை, தெளிவே, பிரிவுழி மகிழ்ச்சி , பிரிவுழிக் கலங்கல், இடந்தலைப்பாடு , பாங்கன் கூட்டம், பாங்கி மதியுடன்பாடு , பாங்கியின் கூட்டம். பாங்கு அமை பகற்குறி ,பகற்குறி இடையீடு இரவுக் குறியே, இரவுக்குறி இடையீடு, வரைவு வேட்கை , வரைவு கடாதல், ஒரு வழித்தணத்தல் , வரைவு இடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் ,என்று ஒரு பதினேழும் களவிற்கு உரிய கிளவித் தொகையே. |
|
உரை
|
|
|
|