பாங்கி மதிஉடன்பாடு
 
138. முன் உறவு உணர்தல் . குறையுற உணர்தல்
இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல் , என்று
ஒரு மூன்று வகைத்தே பாங்கி மதியுடன்பாடு.
உரை
   
முன் உறவு உணர்தல்
139. நாற்றமும் , தோற்றமும் , ஒழுக்கமும் , உண்டியும்,
செய்வினை மறைப்பும் , செலவும் ,பயில்வும் ,என்று
இவ் வகை ஏழினும் ஐயம் உற்று ஓர்தலும் ;
அவ் வகை தன்னால் ஐயம் தீர்தலும் ;
மெய்யினும் , பொய்யினும் வழி நிலை பிழையாது
பல்வேறு கவர் பொருள் சொல்லி நாடலும் ,என
முன் உறவு உணர்தல் மூன்று ஆகும்மே.
உரை
   
குறையுற உணர்தல்
140. பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தோன்
கண்ணியும் , தழையும் ,ஏந்தி நண்ணி
ஊர் , பெயர் , கெடுதியோடு , ஒழிந்தவும் , வினாவுழி
யாரே ? இவர் மனத்து எண்ணம் யாது ? எனத்
தேர்தலும் ; எண்ணம் தெளிதலும் , என ஆங்கு
ஒர் - இரண்டு ஆகும் குறையுற உணர்தல்.
உரை
   
இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல்
141. கையுறை ஏந்தி வந்து அவ் வகை வினாவுழி
எதிர்மொழி கொடுத்தலும் , இறைவனை நகுதலும்,
மதியின் அவர் அவர் மனக்கருத்து உணர்வும் ; என்று
இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல்
ஒரு - மூன்று ஆகும் தெரியும் காலே.
உரை
   
142. ஈங்ஙனம் இயம்பிய இரு - நான்கு கிளவியும்
பாங்கி மதியுடன்பாட்டது விரியே.
உரை