தொடக்கம் |
கற்பொடு புணர்ந்த கவ்வை
|
|
|
183.
| செவிலி புலம்பல், நற்றாய் புலம்பல், கவர் மனை மருட்சி, கண்டோர் இரக்கம், செவிலி பின் தேடிச் சேறல்; என்று ஆங்குக் கற்பொடு புணர்ந்த கௌவை ஐ வகைத்தே. |
|
உரை
|
|
|
|
|
செவிலி புலம்பல் |
184.
| வினவிய பாங்கியின் உணர்ந்த காலை இனையல் என்போர்க்கு எதிர் அழிந்து மொழிதலும், தன் அறிவின்மை தன்னை நொந்து உரைத்தலும், தெய்வம் வாழ்த்தலும்; இவ் ஒரு மூன்றும் இலங்கிழைச் செவிலி புலம்புதற்கு உரிய. |
|
உரை
|
|
|
|
|
நற்றாய் புலம்பல் |
185.
| செவிலி அறத்தொடு நிற்றலின் கவலையில் பாங்கி தன்னொடும், பாங்கியர் தம்மொடும், அயலார் தம்மொடும், பயில் இடம் தமமொடும், தாங்கலள் ஆகிச் சாற்றிய எல்லாம், பூங்கொடி நற்றாய் புலம்பற்கு உரிய. |
|
உரை
|
|
|
|
|
அனை மருட்சி |
186.
| நிமித்தம் போற்றலும், சுரம் தணிவித்தலும், தன் மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கலும், இளமைத் தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கலும், அச்சத் தன்மைக்கு அச்சம் உற்று இரங்கலும், என இவை ஐந்தும் அனை மருட்சிக்கு உரிய. |
|
உரை
|
|
|
|
|
கண்டோர் இரங்கல் |
187.
| ஆயமும், தாயும், அழுங்கக் கண்டோர் காதலின் இரங்கல் கண்டோர் இரக்கம். |
|
உரை
|
|
|
|
|
செவிலி பின்தேடிச் செல்லல் |
188.
| ஆற்றாத் தாயைத் தேற்றலும், ஆற்றிடை முக்கோல் பகவரை வினாதலும், மிக்கோர் ஏதுக் காட்டலும், எயிற்றியொடு புலம்பலும், குரவொடு புலம்பலும், சுவடு கண்டு இரங்கலும், கலந்து உடன் வருவோர்க் கண்டு கேட்டலும், அவர் புலம்பல் தேற்றலும், புதல்வியைக் காணாது கவலை கூர்தலும்; என இவை ஒன்பானும் செவிலி பின் தேடிச் சேறற்கு உரிய. |
|
உரை
|
|
|
|
|
189.
| முற்பட மொழிந்த முறை எழு-மூன்றும் கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரியே. |
|
உரை
|
|
|
|