இல்வாழ்க்கை
 
202. கிழவோன் மகிழ்ச்சி , கிழத்தி மகிழ்ச்சி,
பாங்கி மகிழ்ச்சி , செவிலி மகிழ்ச்சி , என்று
ஈங்கு நால் வகைத்து இல்வாழ்க்கையே.
உரை
   
203. தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தலும்,
தலைவனைப் பாங்கி வாழ்த்தலும் , தலைவியை
வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை
உரையாய் என்றலும் , பெருமகள் உரைத்தலும்,
தலைவனைப் பாங்கி வரையும் நாள் அளவும்
நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதலும்,
மன்றல்மனை வரு செவிலிக்கு இகுளை
அன்பு உறவு உணர்த்தலும் , வாழ்க்கை நன்று அறைதலும்,
மண மனைச் சென்று வந்த செவிலி
பொற்றொடி கற்பு இயல் நற்றாய்க்கு உணர்த்தலும்,
நல் மனை வாழ்க்கைத் தன்மை உணர்த்தலும் :
அன்னவர் காதல் அறிவித்தலும் எனும்
இன்னவை பத்தும் இல்வாழ்க்கை விரியே.
உரை