கூற்று
 
களவில் கூற்றிற்கு உரியர்
213. தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன்,
பாங்கி, செவிலி, என்று ஈங்கு இவ் அறுவரும்
சாற்றிய களவில் கூற்றிற்கு உரியர்.
உரை
   
கற்பில் கூற்றிற்கு உரியவர்
214. நற்றாய், கண்டோர், பாணன், கூத்தர்,
விறலி, பரத்தையர், அறிவர், என்று எழுவரும்;
அறுவர் என்று அவரும்; ஆகிய அனைவரும்
குறைவு அறு கற்பில் கூற்றிற்கு உரியர்.
உரை
   
கூற்றிற்கு உரிமை இல்லாதார்
215. பயந்தோன், தன் ஐ, உயங்கு நோய் அறிவோர்,
ஊரவர், அயலோர், சேரியோர், என்று இவர்
முகத்து உரை நிகழா அகப்பொருள் அகத்தே.
உரை
   
தலைவன் கூற்றிற்கு ஒரு சிற்ப்பு விதி
216. தமர் வரின் இடைச்சுரம் தன்னில் கிழத்தியோடு
அமர்தரு கிழவோன் ஆணையும் கூறும்.
உரை
   
தலைவி கூற்றிற்கு ஒரு சிறப்பு விதி
217. உடன் போய் மீண்ட கொடுங்குழை மடந்தை
பிரிவுழித் தலைவனொடு சுரத்து இயல் பேசலும்,
பிரிந்துழி நெஞ்சொடும் பிறரொடும் வருந்திச்
சொல்லலும், உரியள் சொல்லும் காலை.
உரை
   
நற்றாய் கூற்று நிகழாத இடம்
218. தலைவன், தலைவியொடு நற்றாய் கூறாள்.
உரை
   
நற்றாய் கூற்று நிகழும் இடம்
219. புணர்ந்து உடன் போயது உணர்ந்த பின்னர்
அந்தணர், தெய்வம், அயலோர், அறிவர்,
சிந்தைநோய் அறிவோர், செவிலி, பாங்கியொடு,
கண்டோர்க்கு, உரைக்கும் பண்புடை நற்றாய்.
உரை
   
செவிலி கூற்று நிகழும் இடம்
220. தாயொடும், பாங்கிதான், முதலாரொடும்
சேயிழை செவிலியும் செப்பும் ஆங்கே.
உரை
   
கண்டோர் கூற்று நிகழும் இடம்
221. தாயர் , பாங்கியர் , தலைவன் ,தலைவியோடு
ஏயும் என்ப கண்டோர் கூற்றே.
உரை
   
பிறர் கூற்று
222. சாற்றா எழுவரும் தலைவன் , தலைவியோடு
ஏற்றன கூறுப இடந்தொறும் இடந்தொறும்
உரை
   
தலைவி கூற்றிற்குப் புறனடை
223. நெஞ்சும் , நாணும் , நிறைசேர் அறிவும்,
செஞ்சுடர்ப் பருதியும் , திங்களும் மாலையும்,
புள்ளும் , மாவும் , புணரியும் , கானலும்,
உள்ளுறுத்து இயன்றவும் ,மொழிந்தவை பிறவும் ;
தன் சொல் கேட்குந போலவும் , தனக்கு அவை
இன்சொல் சொல்லுந போலவும் , ஏவல்
செய்குந போலவும் , தேற்றுந போலவும்,
மொய்குழல் கிழத்தி மொழிந்தாங்கு அமையும்.
உரை
   
எல்லாக் கூற்றிற்கும் புறனடை
224. இறையோன் முதலோர் யாரொடும் இன்றித்
தம்மொடு தாமே சாற்றியும் அமைப.
உரை