பக்கம் எண் :

 12                            இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 ஓதற்குப் பிரிந்த தலைவன் இடையே திரும்பி வருதற்கும் தங்கும்
  இடத்தில் மனம் வருந்துதற்கும் உரியன் அல்லன் என்பது.


....


88

 தூது துணை இவைபற்றிப் பிரிந்தோன், தன்செயல் குறித்தகால
  வரையறையைக் கடந்து நீட்டிப்பின், பாசறைக்கண் மனம் வெறுத்துப்
  புலம்புதலும் கூடும் என்பது.


....


89

 தலைவி கற்புக்காலத்தில், பூத்தமை சேடியின் புரவலர்க்கு உணர்த்தல்
  முதலாகத் தலைவனோடு ஆறும் குளனும் ஆடி விளையாடல்
  ஈறாகப் பலசெயல்களும் நிகழ்த்துவாள் என்பது.



....



90

 வாயில்வேண்டல் முதலிய எட்டும் பிறவும் பாணற்கு உரிய
  தொழில்களாம் என்பது.


....


91

 செலவின்தேற்றல் முதலிய நான்கும் பிறவும் விறலிக்கு உரிய
  தொழில்களாம் என்பது.


....


92

 செல்வம் வாழ்த்தல் முதலிய எட்டும் பிறவும் கூத்தர்க்கு உரிய
  தொழில்களாம் என்பது.


....


93

 தலைவியை வாயில்வேண்டல் முதலிய பத்தும் பிறவும் இளையர்
  தொழில்களாம் என்பது.


....


94

 புலவி தீர்த்தலும், தலைவன் வருகையைத் தலைவிக்குக் கூறலும்
  கண்டோர்க்கு உரிய தொழில்களாம் என்பது.


....


95

 இளமைநிலையாமை எடுத்துரைத்தல் முதலிய மூன்றும் பிறவும்
  பார்ப்பனப் பாங்கற்கு உரிய தொழில்களாம் என்பது.


....


96

 தலைவனை நல்வழியில் நிலைநிறுத்துதலும், தீயவழியிலிருந்து
  நீக்குதலும் பிறவும் வேளாளப் பாங்கன் தொழில்களாம் என்பது.


....


97