பக்கம் எண் :

 14                            இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 காமக்கிழத்தி, ஒருவனிடமே உரிமை பூண்டு வாழ்ந்த பரத்தைமகளாய்
  தலைவன் மணத்தற்கு உரியள் என்பது.


....


109

 பொருளையே விரும்பும் சேரிப்பரத்தையர் மகளிராய்த் தலைவனால்
  காதலில் புணரப்படுவோர் காதற்பரத்தையர் என்பது.


....


110

 அவருள்ளும் சிலரைத் தலைவன் வரைந்துகோடலும் உண்டு என்பது.

....

111

 இல்லறத்தைச் செவ்வனே செய்து மக்களொடு மகிழ்ந்து வாழ்ந்து
  காமவேட்கை தீர்ந்த முதுமையில் தலைவனும் தலைவியும் தம்ஊரை
  விடுத்துக் காட்டிற்குச் சென்று எல்லையற்ற சுற்றத்தாரோடு
  துறவறத்தை மேற்கொள்வர் என்பது.




....




112

 களவு ஒழுக்கம் எனப்படுவது பிரமம் முதலிய எண்வகையாக வேதம்
  கூறும் மணங்களுள் கந்தருவ வழக்கத்தை ஒக்கும் என்பது.


....


113

 காட்சி ஐயம் துணிவு குறிப்பறிவு என்று கைக்கிளை நான்கு வகைப்
  படும் என்பது.


....


114

 ஊழினது ஆணையானே ஒத்த தலைவனும் தலைவியும் எதிர்ப்படுதலே
  காட்சி; தலைவன் தலைவியைவிட மேம்பட்டவனாய் இருப்பினும்
  அஃது ஒக்கும் என்பது.



....



115

 தலைவன் தலைவியரிடையே உள்ள ஒப்புமைகள் பிறப்பு முதலிய
  பத்தும் என்பது.


....


116

 தலைவியின் வடிவத்தையும் அவளைக் கண்ட சூழலையும் நோக்கத்
  தலைவனுக்கு ஐயம் பிறக்கும் என்பது.


....


117

 எழுதியவல்லி முதலிய பலவும் தலைவன் தலைவியிடத்து அவள்
  தெய்வமகளோ மானுடமகளோ என்று கொள்ளும் ஐயத்தைப்
  போக்கும் என்பது.



....



118