தலைவியினுடைய அன்புப்பார்வை தலைவனுக்கு அவள் புணர்ச்சிக் குறிப்பை அறிதற்கு உதவும் என்பது. |
|
|
இயற்கைப்புணர்ச்சி முதல் வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதல் ஈறாகிய பதினேழும் களவு என்னும் கைகோளுக்கு உரிய கிளவித்தொகைகளாம் என்பது. |
|
|
கலந்துழி மகிழ்தல் முதலிய மூன்றும் தெய்வத்தான் எய்திய இயற்கைப்புணர்ச்சியின் விரிகளாம் என்பது. |
|
|
வேட்கைஉரைத்தல் முதலிய நான்கும் தலைவியால் கூடும் தெய்வப்புணர்ச்சியின் வகைகளாம் என்பது. |
|
|
இரந்துபின்நிற்றற்கு எண்ணல் முதலாகக் கூறப்பட்ட பதினைந்தும் பிறவும் தலைவியால் புணரும் இயற்கைப் புணர்ச்சியின் விரிவாம் என்பது. |
|
|
ஐயம்தீர்த்தல், பிரிவு அறிவுறுத்தல் என்று வன்புறை இருவகைத்து என்பது. |
|
|
அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதலிய ஆறும் பிறவும் வன்புறையின் விரிகளாம் என்பது. |
|
|
தலைவன்சொற்களைத் தலைவி நம்புதல் தெளிவு எனப்படும் என்பது. |
|
|
செல்லும் தலைவியின் செலவுகண்டு தலைவன் உளத்தொடு சொல்லுதலும், பிறகு பாகனொடு சொல்லுதலும் பிரிவுழி மகிழ்ச்சியின் விரிகளாம் என்பது. |
|
|
மருளுற்று உரைத்தலும் தெருளுற்று உரைத்தலும் பிரிவுழிக் கலங்கலின் வகைகளாம் என்பது. |
|
|