பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா-21                               151


 

 நோக்கிச்சென்ற என்நெஞ்சு, அவன் கருணைகாட்டவில்லை என்ற
 காரணத்தால் அவன்பக்கல் இருப்பதை வெறுத்து என்னிடம் மீண்டு வாராது
 ஒழிக" என்று தலைவன் பொருட்பிரிவிடைத் தலைவி இரங்கி உரைத்த
 பாடல் இது. இதன்கண் கானல்மாலை-நீல்நிறப்பெருங்கடல்-புள்குடம்பைசேர
 வண்டு ஆர்க்கும் காலை-என முதற்பொருள்களும், கழிப்பூ - புன்னை -
 தாழை - பெண்ணை - முதலிய கருப் பொருள்களும், நெஞ்சம் இனைய
 அருளார் ஆயினும் அவர்கேண்மை அறாஅலியர், நெஞ்சம் வாரற்க என
 இரங்கும் உரிப்பொருளும் வந்தவாறு காண்க.

     "நறை பரந்த" என்ற பாடல்:

     "சந்தன மரங்களை வெட்டிச் சீர்திருத்தி விதைத்த தினைக்கொல்லையில்
 அம்புபட்ட மான்கள் வந்தனவா? என்ற கருத்துடைய இப்பாடலில், சாந்தம்-
 ஏனல்-என்ற கருப்பொருள்களும், தலைவன், தலைவி தோழி இருவரும்
 நின்ற இடத்து மதிஉடன்படுத்தலாகிய புணர்தல்நிமித்தமாம் உரிப்பொருளும்
 வர முதற்பொருள் வாராமை காண்க.

     "முதுக்குறைந்தனளே" என்ற பாடல்:

     மலைநாட்டுத் தலைவன்மகள் முலைகள் முகிழ்க்காத பிள்ளைப்
 பிராயத்திலேயே பேரறிவு படைத்தாள்-என்ற கருத்தமைந்த இப்பாடலில்,
 தலைவி காமப் பொருட்கண் சிறிது அறிவு படைத்தாள் என்ற உரிப்பொருள்
 ஒன்றுமே கொண்டு ஏனைய முதலும் கருவும் இன்றிக் குறிஞ்சித்திணை
 வந்தவாறு காண்க.

     "நாளும் நாளும்" என்றபாடல்:

     "நாடோறும் முயற்சி இன்றி வீட்டிலேயே அகஇன்பம் நுகர்பவர் புகழ்
 எய்தார் என்று நம் தலைவர் பொருள் தேடப் பிரிந்துள்ளார் ஆதலின், நீ
 கண்ணீரைத் துடைத்துக்கொள்க" என்று தோழி தலைவியை வற்புறுத்தி