பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா-23                               177


 

       அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்தியாத்து
       மல்லல்ஊர் மறுகின்கண் இவட்பாடும் இஃதுஒத்தன்
       எல்லீரும் கேட்டீமின் என்று.                       கலி. 138

     இக்கலியுள் நெய்தல் திணையோடு பெருந்திணையும் மயங்கி வந்தன.
 ஒழித்தனவற்றோடும் இவ்வாறே மயங்குமாறு வந்துழிக்காண்க. பிறவும்
 அன்ன.                                                      23

விளக்கம்

     எய்தாதது-கைக்கிளை பெருந்திணைகளுக்கு நிலம் வகுக்காதது;
 எய்துவித்தல்-அவை ஐந்திணையுள் ஏற்றபெற்றிவரும் என்பது.

     "உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே".    தொல். பொ. 13

     என்ற நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் தந்த விளக்கமும் எடுத்துக்
 காட்டுக்கள் சிலவும் இவரால் கொள்ளப்பட்டன.

     "ஆய்தூவி அனமென"-

     "காமம் சாலா இளமையோன்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திய"
 முதியோனாகிய கைக்கிளைத் தலைவன், உள்ளத்தால் அவள் புணர்ச்சி கருதி
 அவளைத்தான் விரும்புதல் தோன்ற, அன்னம் போலவும், மயில் போலவும்
 புறாப் போலவும் அமைந்த அவள் எழில் நலம் அவளைக்கண்ட தன்னை
 மயக்குவதாகக் கூறும் இக்கைக்கிளைச் செய்தி, குறிஞ்சித்திணையில் இடம்
 பெற்றவாறு.

     "எழில் மருப்பு"-

     "மதவேழம் அடங்குதல் தவிர்ந்து பாகனது அங்கு சத்திற்கு அடங்காது
 போவது போல, அறிவும் அடக்கமும்
     23