பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                                21


 

 இல்வாழ்க்கையானது கிழவோன் மகிழ்ச்சி முதலாக நான்கு
  வகைப்படும் என்பது.                                       .... 179

 தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் முதலிய பத்தும் பிறவும்
  இல்வாழ்க்கையின் விரி என்பது.                              .... 180

 வாயில் வேண்டல் முதலிய நான்கும் பரத்தையிற் பிரிவின் வகைகளாம்
  என்பது.                                                  .... 181

 காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு ஏது ஈதாம் இவ்விறைவிக்கு
  என்பது முதலாக உரைத்த பதினொன்றும் பிறவும், உணர்த்த உணரும்
  ஊடலின் விரிகளாம் என்பது                                 .... 182

 வெள்ளணி அணிந்து விடுப்புழி அண்ணல் வாயில் வேண்டல்
  முதலிய பதினான்கும் பிறவும், உணர்த்த உணரா ஊடலின் விரிகளாம்
  என்பது                                                  .... 183

 ஆயிழை மைந்தனும் ஆற்றாமையும் வாயிலாக வரவு எதிர்கோடல்
  முதலிய நான்கும் பிறவும், உணர்த்த உணரா ஊடற்கு உரிய
  ஒழிபாம் என்பது                                          ..... 184

 சென்ற மூன்று நூற்பாச் செய்திகளும் பரத்தையிற் பிரிவின்
  விரி என்பது.                                             ..... 185

 பிரிவு அறிவுறுத்தல் முதலிய ஒன்பதும் பிறவும், ஓதல் முதலிய  
  ஐவகைப் பிரிவுகளின் வகைகளாம் என்பது.                     ..... 186

 அகப்பொருள் பன்னிருபகுதிப் பட்டுச் செய்யுளுக்கு உறுப்பாய்
  வரும் என்பது                                            ..... 187

 அப்பன்னிரு பகுதிகளும் திணை கைகோள் கூற்று கேட்போர்
  இடன் காலம் பயன் முன்னம் மெய்ப்பாடு எச்சம் பொருள்
  வகை துறை என்பனவாம் என்பது.                            ..... 188