பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா-102                             245


 

விளக்கம்

     "கோடலஞ்செங்கை" - "தலைவியரோடு கூடிய சுவட்டுடனே பாதிரிமரச்
 சோலைகளிலும் மணற்குன்றங்களிலும் பழகி நம்மிடையே ஆடலும் பாடலும்
 கண்டு பாராட்டுவதைத் தவிர, நம்மிடம் அன்போடு ஊடலும் கூடலும்
 நிகழ்த்துபவன் அல்லன் தலைவன்" என்றவாறு.

     "தேமேகுவளையும்" -

     "தலைவியர் தலைவரைக் கவர்ச்சி செய்வதற்குரிய தனங்களை
 உடையவராய் இருந்தும், செந்நெல்லையும் கரும்பையும் குவளையுடன்
 இடைதெரிபு இன்றி மாடுகள் மேயும் வயல்களை உடைய ஊரனுடைய
 மார்பினை யாமே விரும்பிக் கைப்பற்றினேம் என்று ஏசுவது தம்மைத்தாமே
 ஏசிக்கொள்வதேயாம்" என்றவாறு.

 "அரியார்விழி" -

     "தலைவி தலைவனைத் தன் ஆயத்தாரோடு புறம் போகாது காப்பினும்,
 அவளைவிடுத்து என்னிடம் அவன் வாராது ஒழியின், கீழ்மக்கள்
 செல்வம்போல என் கை வளையல்கள் உடைபட்டுச் சிதைவன ஆகுக"
 என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும் -                                         ந. அ. 106

102

பரத்தையருக்கு உரிய வேறுபாடு

 475 பரத்தையர் காதல் பரத்தையைப் புகழ்தலும்
     தம்மை இகழ்தலும் தம்முளும் கூறுப.

     இது பரத்தையர்க்கு உரியது ஒரு வேறுபாடு கூறுகின்றது.