பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                                25


 

 வெளிப்படை உவமம் வினை, பயன், வடிவு, நிறம் என்று
  நால்வகைப்படும் என்பது.                                   ..... 215

 இறைச்சிப் பொருள் பொருளின் புறத்தே புலப்படும் என்பது         .....216

 முதியவன் காமஞ் சாலா இளமையோளை வருணித்து அவள் மறுமாற்றம்
  தாராத நிலையினும் தானே பேசி இன்புறுதலே சிறப்பான
  கைக்கிளையாம் என்பது.                                    ..... 217

 இக்கைக்கிளை தலைமைப்பாடு இல்லாதவருக்கும் இழி
  குலத்தோருக்குமே உரித்து என்பது                           ..... 218

 மடல் ஏறுதல் முதலிய நான்கும் சிறப்பில்லாப் பெருந்திணை
  என்பது.                                                 ..... 219

 பாட்டுடைத் தலைவன் கிளவித்தலைவன் எனப்பாடலுள் தலைவர்
  இருவர் சுட்டப்படுவர் என்பது                               ..... 220

 அவருள் பாட்டுடைத் தலைவனே உயர்ந்தோன் என்பது.           ..... 221

 நிலப்பெயர் முதலிய ஐந்தானும் பாட்டுத் தலைவரும், இயற்பெயர்
  ஒழிந்த ஏனைய பெயர்களால் கிளவித் தலைவரும் சுட்டப்படுவர்
  என்பது                                                 ..... 222

 கிளவித்தலைவனுக்கு இயற்பெயர் கூறார் என்பது                 ..... 223

 ஒரே பாடலில் இருவரும் ஒருசேர வருதலும், அவருள் ஒருவரே
  வருதலும், ஒருவரும் வாராதுஒழிதலும் நிகழும் என்பது           ..... 224

 அகப்புறப் பாடலும் அகப்பாடல் இலக்கணத்தைப் பெரும்பாலும்
  ஏற்கும் என்பது.                                          ..... 225

 கூறியது கொண்டு கூறாததனையும் உய்த்துணர்ந்து கொள்ளுதல்
  பண்பாளர் கடமை என்ற இயல் புறனடை இஃது என்பது.         ..... 226

      4